இயேசு ராஜா ஏழை என் உள்ளம்
தேடி வந்தீரே

1. என் நேசர் நீர்தானையா
என்னை தேற்றிடும் என தேசையா
சாரோனின் ரோஜா லீலி புஷ்பமே
சீக்கிரம் வாருமையா - ஐயா - ( இயேசு ராஜா )

2. உளையான சேற்றினின்று என்னை
உயிர்ப்பித்து ஜீவன் தந்தீர்
அலைபோல துன்பம் என்னை சூழ்ந்தபோது
அன்பாலே அணைத்துக் கொண்டீர் - ஐயா - ( இயேசு ராஜா )


3. ஆபத்து காலத்திலே நல்ல
அநுக்கிரகம் துணையும் நீரே
அன்பே என்றீர் மகளே என்றீர்
மணவாட்டி நீதான் என்றீர் - ஐயா - ( இயேசு ராஜா )

4. பரிசுத்த ஆவியினால் என்னை
அபிஷேகம் செய்தீர்
பயங்களை நீக்கி பலத்தையே தந்து
பரிசுத்த மகளாக்கினீர் - ஐயா - ( இயேசு ராஜா )

தேடுதல்

இன்றைய வசனம்

பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும்போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.


மாற்கு 16:15