ஒரு நாளும் எனை மறவா தெய்வம் நீரே
நன்றியோடு உம்மைத் துதிக்கிறேன் - (2)

நன்றி இயேசுவே எந்நாளும் இயேசுவே - (2)

1. வருடங்கள் காலங்களாய்
என்னை வழுவாமல் காத்தீரையா - (2)
உம் வல்லக்கரத்தால்
நீர் என்னைத் தாங்கினீர்
உந்தன் சிறகாலே மூடிக் காத்திட்டீர் - (2) - (நன்றி இயேசுவே)

2. வாக்குத்தத்தம் தந்தவரே
உந்தன் வாக்கில் உண்மை உள்ளவரே - (2)
யார் மறந்தாலும்
நான் மறவேனே
என்ற வாக்கெனக்கு அளித்தவரே - (2) - (நன்றி இயேசுவே)

3. எதிர்காலம் உம் கையிலே
எந்தன் பயம் யாவும் நீங்கினதே - (2)
நீர் என் பக்கத்தில்
நான் பயப்படேனே
எந்தன் நிழலாக இருக்கின்றீரே - (2) - (நன்றி இயேசுவே)

தேடுதல்

இன்றைய வசனம்

பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும்போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.


மாற்கு 16:15