பல்லவி:
பாடித் துதி மனமே - பரனைக்
கொண்டாடித் துதி தினமே

அனுபல்லவி:
நீடித்த காலமதாகப் பரன் எமை
நேசித்த பட்சத்தை வாசித்து வாசித்துப் - (பாடித் துதி மனமே)


சரணங்கள்:
1. தீர்க்கதரிசிகளைக் கொண்டு முன்னுறச்
செப்பின தேவ பரன் இந்த காலத்தில்
மார்க்கமதாகக் குமாரனைக் கொண்டு
விளக்கின அன்பை விழைந்து தியானித்து - (பாடித் துதி மனமே)

2. சொந்த ஜனமான யூதரைத் தள்ளித்
தொலைவில் கிடந்த புறஜாதியாம் எமை
மந்தையில் சேர்த்துப் பராபரன் தம்முடை
மைந்தர்களாக்கின சந்தோஷத்துக்காகப் - (பாடித் துதி மனமே)

3. எத்தனை தீர்க்கர், அநேக அப்போஸ்தலர்
எத்தனை போதகர்கள், இரத்த சாட்சிகள்
எத்தனை வேண்டுமோ அத்தனையும் தந்திங்கு
இத்தனையாய்க் கிருபை வைத்த நம் கர்த்தரைப் - (பாடித் துதி மனமே)


தேடுதல்

இன்றைய வசனம்

பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும்போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.


மாற்கு 16:15