எந்தன் கன்மலை ஆனவரே
என்னை காக்கும் தெய்வம் நீரே - 2
வல்லமை மாட்சிமை நிறைந்தவரே
மகிமைக்கு பாத்திரரே - 2

ஆராதனை உமக்கே
ஆராதனை உமக்கே
ஆராதனை உமக்கே
ஆராதனை உமக்கே


1. உந்தன் சிறகுகளின் நிழலில்
என்றென்றும் மகிழச் செய்தீர் - 2
தூயவரே என் துணையாளரே
துதிக்குப் பாத்திரரே - 2 - ( ஆராதனை உமக்கே )

2. எந்தன் பெலவீன நேரங்களில்
உம் கிருபை தந்தீரைய்யா - 2
இயேசு ராஜா என் பெலனானீர்
எதற்கும் பயம் இல்லையே - 2 - ( ஆராதனை உமக்கே )

3. எந்தன் உயிருள்ள நாட்களெல்லாம்
உம்மை புகழ்ந்து பாடிடுவேன் - 2
ராஜா நீர் செய்த நன்மைகளை
எண்ணி துதித்திடுவேன் - 2 - ( ஆராதனை உமக்கே )

தேடுதல்

இன்றைய வசனம்

பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும்போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.


மாற்கு 16:15