எந்நாளுமே துதிப்பாய் - என்னாத்துமாவே நீ
எந்நாளுமே துதிப்பாய்
இந்நாள் வரையிலே உன்னாதனார் செய்த
எண்ணில்லா நன்மைகள் யாவு மறவாது - ( எந்நாளுமே துதிப்பாய் )
1. பாவங்கள் எத்தனையோ - நினையாதிருந்தாருன்
பாவங்கள் எத்தனையோ
பாழான நோயை அகற்றிக் குணமாக்கிப்
பாரினில் வைத்த மகா தயவை எண்ணி - ( எந்நாளுமே துதிப்பாய் )
2. எத்தனையோ கிருபை - உன்னுயிர்க்குச் செய்தாரே
எத்தனையோ கிருபை
நித்தமுனை முடி சூட்டினதுமன்றி
நேயமதாக ஜீவனை மீட்டதால் - ( எந்நாளுமே துதிப்பாய் )
3. நன்மையாலுன் வாயை - நிறைத்தாரே பூர்த்தியாய்
நனமையாலுன் வாயை
உன் வயது கழுகைப்போல் பலங்கொண்டு
ஓங்கு இளமை போலாகவே செய்ததால் - ( எந்நாளுமே துதிப்பாய் )
4. பூமிக்கும் வானத்துக்கும் - உள்ள தூரம் போலவே
பூமிக்கும் வானத்துக்கும்
சாமி பயமுள்ளவர் மேல் அவர் அருள்
சாலவும் தங்குமே சத்தியமேயிது - ( எந்நாளுமே துதிப்பாய் )
5. மன்னிப்பு மாட்சிமையாம் - மா தேவனருளும்
மன்னிப்பு மாட்சிமையாம்
எண்ணுவாயோ கிழக்கும் மேற்கும் தூரமே
மண்ணில் உன்பாவன் அகன்றத் தூரமே - ( எந்நாளுமே துதிப்பாய் )
6. தந்தை தன பிள்ளைகட்கு - தயவோ டிரங்கானோ
தந்தை தன பிள்ளைகட்கு
எந்த வேளையும் அவரோடு தங்கினால்
சொந்தம் பாராட்டியே தூக்கிச் சுமப்பாரே - ( எந்நாளுமே துதிப்பாய் )