என்னை நேசிக்கின்றாயா
என்னை நேசிக்கின்றாயா
கல்வாரி காட்சியை கண்டபின்னும்
நேசியாமல் இருப்பாயா - 2

பாவத்தின் அகோரத்தைப் பார்
பாதகத்தின் முடிவினை பார் - 2
பரிகாசச் சின்னமாய் சிலுவையிலே
பலியானேன் பாவி உனக்காய் - 2 - (என்னை நேசிக்கின்றாயா)


பாவம் பாரா பரிசுத்தர் நான்
பாவி உன்னை அழைக்கின்றேன் பார் - 2
உன் பாவம் யாவும் சுமப்பேன் என்றேன்
பாதம் தன்னில் இளைப்பாற வா - 2 - (என்னை நேசிக்கின்றாயா)

வானம் பூமி படைத்திருந்தும்
வாடினேன் உன்னை இழந்ததினால் - 2
தேடி இரட்சிக்க பிதா என்னை அனுப்பிடவே
ஓடி வந்தேன் மானிடனாய் - 2

உம்மை நேசிக்கின்றேன் நான்
உம்மை நேசிக்கின்றேன் நான்
கல்வாரி காட்சியை கண்டபின்னும்
நேசியாமல் இருப்பேனோ - 2
நேசியாமல் இருப்பேனோ
நேசியாமல் இருப்பேனோ


தேடுதல்

இன்றைய வசனம்

பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும்போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.


மாற்கு 16:15