தாசரே இத்தரணியை அன்பாய்
இயேசுவுக்குச் சொந்தமாக்குவோம்

நேசமாய் இயேசுவைக் கூறுவோம்
அவரைக் காண்பிப்போம்
மாஇருள் நீக்குவோம்
வெளிச்சம் வீசுவோம்

1. வருத்தப்பட்டு பாரஞ் சுமந்தோரை
வருந்தியன்பாய் அழைத்திடுவோம் - 2
உரித்தாய் இயேசு பாவ பாரத்தை
நமது துக்கத்தை நமது துன்பத்தை சுமந்து தீர்த்தாரே - ( தாசரே இத்தரணியை அன்பாய் )


2. பசியுறறோர்க்கு பிணியாளிகட்கு
பட்சமாக உதவி செய்வோம் - 2
உசித நன்மைகள் நிறைந்து
தமை மறந்து இயேசு கனிந்து திரிந்தனரே - ( தாசரே இத்தரணியை அன்பாய் )

3. நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரை
நீசரை நாம் உயர்த்திடுவோம் - 2
பொறுக்க வொண்ணா கஷ்டத்துக்குள்
நிஷ்டூரத்துக்குள் படுகுழிக்குள் விழுந்தனரே - ( தாசரே இத்தரணியை அன்பாய் )

4. மார்க்கம் தப்பி நடப்போரை சத்திய
வழிக்குள் வந்திட சேர்த்திடுவோம் - 2
ஊக்கமாக ஜெபித்திடுவோம் நாம் முயன்றிடுவோம்
நாம் உழைத்திடுவோம், நாம் ஜெயித்திடுவோம் - ( தாசரே இத்தரணியை அன்பாய் )

5. இந்துதேச மாது சிரோமணிகளை
விந்தை யொளிக்குள் வரவழைப்போம் - 2
சுந்தர குணங்களடைந்து அறிவிலுயர்ந்து
நிர்ப்பந்தங்கள் தீர்ந்து சிறந்திலடங்கிட - ( தாசரே இத்தரணியை அன்பாய் )

தேடுதல்

இன்றைய வசனம்

பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும்போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.


மாற்கு 16:15